வாக்காளர்களை கவர்ந்த 'செல்பி பாயிண்ட்'

Advertisement
தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு வாக்குச் சாவடிகளில் 'செல்பி பாயிண்டுகளை' அமைத்திருந்தது. இது அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடந்தன. ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்காளர்களை வரவேற்க ரோபோக்கள், பெண்களுக்கான தனி இளஞ்சிவப்பு (பிங் நிற) வாக்குச்சாவடி மையங்கள், பசுமை வாக்குச்சாவடிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதுதவிர வாக்காளர்களை, குறிப்பாக இளைஞர்களைக் கவரும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு வாக்குச் சாவடிகளில் 'செல்பி பாயிண்டுகளை' அமைத்திருந்தது. இது அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இளம் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த பிறகு, மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான செல்பி பாயிண்டுகளில் புகைப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
Advertisement
மதுரையில் செல்பி பாயிண்ட் வரவேற்பு
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில், பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் இந்த செல்பி பாயிண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் வாக்கு செலுத்திய பின்னர், செல்பி பாயிண்டில் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்தனர்.
தேர்தல் என்பது ஒரு திருவிழாவை போல் கொண்டாட அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, இளைஞர்களை கவர்வதற்காக செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement






