வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர் டெபாசிட்டை தக்க வைக்க எவ்வளவு வாக்குகள் தேவை?

Advertisement
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் பணத்தை இழக்காமலிருக்க மொத்த வாக்குகளில் 6-ல் 1 பங்கு (16.67%) பெற வேண்டும். இல்லையெனில் டெபாசிட் திரும்பக் கிடைக்காது.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
Advertisement
வேட்பாளர்கள் எண்ணிக்கை
இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வைப்புத்தொகையாக ரூ. 10,000 செலுத்த வேண்டும். சில வேட்பாளர்கள் தோல்வியடைவது மட்டுமின்றி, அவர்கள் செலுத்திய டெபாசிட் பணத்தையும் இழந்து விடுவர்.
டெபாசிட் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?
டெபாசிட் பணத்தை இழக்காமலிருக்க, இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு வேட்பாளர் அவர் போட்டியிடும் தொகுதியில் மொத்தம் பதிவாகியுள்ள வாக்குகளில் 6-ல் 1 பங்கு, அதாவது 16.67 சதவீதம் வாக்குகள் பெற வேண்டும். இல்லையெனில், டெபாசிட் திரும்பக் கிடைக்காது. இதனோடு, அரசியல் அங்கீகாரத்தையும் இழக்க நேரிடும்.
டெபாசிட் தொகை
இந்த டெபாசிட் தொகை, சட்டமன்ற தேர்தலில் பொதுப்பிரிவினருக்கு ரூ. 10,000, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.5,000-ஆகவும் இருக்கும்.
Advertisement






