தமிழக அரசியலில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்.

Advertisement
தமிழகத்தில் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 130 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. இந்தியாவில் ஒரு சினிமா நடிகர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தது அதுவே முதல்முறை.
தமிழகத்தில் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., இ.காங்கிரஸ், ஜனதா என 4 முனைப்போட்டி நிலவியது. வாக்குப்பதிவு ஜூன் மாதம் 12, 14 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை ஜூன் 15-ந்தேதி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின.
இதில் அ.தி.மு.க. 130 இடங்களை பிடித்தது. அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 12 தொகுதிகளை பிடித்தது. தி.மு.க. 48 இடங்களையும், காங்கிரஸ் 27 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி 5 இடங்களையும் பெற்றன. ஜனதா கட்சிக்கு 5 இடங்கள் கிடைத்தது.
Advertisement
இந்தியாவில் முதல்முறை
இந்தியாவில் ஒரு சினிமா நடிகர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தது அதுவே முதல்முறை.
தேர்தல் முடிவு வெளிவந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதில் மீதியிருந்த காட்சிகளை நடித்து கொடுத்த பிறகே முதல்-அமைச்சராக பதவி ஏற்க முடிவு செய்தார்.
முதல்-அமைச்சராக பதவியேற்பு
அதன்படி தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களுக்கு பிறகு ஜூன் 30-ந்தேதி முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவியேற்றார்.
Advertisement






