Daily ThanthiMaalaimalarThanthi TVDTNext
Articles
ஏப்ரல் 29, 5:00 pm3 min read

வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள்

வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள்

Advertisement

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4-ந் தேதி 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைமுறை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த 23-ந் தேதி (23.4.2026) நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, மே 4-ந் தேதி (திங்கட்கிழமை) 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைமுறை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

எண்ணிக்கை நடைமுறை

வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கும்.

முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் தொடங்கப்படும்.

எண்ணிக்கை மேற்பார்வை

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேஜைகளில் எண்ணப்படும். இரண்டுக்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

Advertisement