அரசியலில் முத்திரை பதித்த நடிகர் எஸ்.எஸ்.ஆர்.

Advertisement
இந்திய தேர்தல் வரலாற்றில் நடிகராக இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வான முதல் சினிமா பிரபலம் எஸ்.எஸ்.ஆர். எனும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான். மதுரை மாவட்டம் சேடப்பட்டி இவரது சொந்த ஊர்.
இந்திய தேர்தல் வரலாற்றில் நடிகராக இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வான முதல் சினிமா பிரபலம் எஸ்.எஸ்.ஆர். எனும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான். மதுரை மாவட்டம் சேடப்பட்டி இவரது சொந்த ஊர்.
1952-ம் ஆண்டில் வெளியான பராசக்தி படம் சிவாஜி கணேசனின் திரைவாழ்வில் எவ்வாறு ஒளியேற்றி வைத்ததோ, அதே படம்தான் திரையுலகுக்கு எஸ்.எஸ்.ராஜேந்திரனையும் தந்தது.
முற்போக்கு கருத்துகளை கொண்ட சினிமா படங்களை தேர்ந்தெடுத்து நடித்து எஸ்.எஸ்.ஆர். பிரபலமானார். பெரியார். அண்ணா பின்பற்றிய சுயமரியாதை கொள்கைகளை கடைபிடித்தார்.
இதனால் இவருக்கு 'லட்சிய நடிகர்' என பட்டம் சூட்டினர். முற்போக்கு கருத்துகளை நாடகங்கள், சினிமா வசனங்களாக பேசினார். தமிழ் மக்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். அறிஞர் அண்ணா மீதும், தி.மு.க.வின் மீதும் அளவற்ற பற்று கொண்டு தீவிர அரசியலிலும் ஈடுபட்டார்.
தன் இல்லத்தில் எந்த நிகழ்வு நடைபெற்றாலும் அதில் அண்ணா இன்றி நடத்தமாட்டார். தான் கட்டிய இல்லத்திற்கு 'அண்ணா இல்லம்' என பெயர் சூட்டி மகிழ்ந்தார். பகுத்தறிவு கொள்கையில் தீவிர பற்றின் காரணமாக புராண இதிகாச படங்களில் இனி நடிப்பதில்லை எனவும் அறிவித்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பாக அமைந்தது.
திரையுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி என இருபெரும் ஆளுமைகளின் மத்தியில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.
1962-ம் ஆண்டில் முதல் முறையாக தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்மூலம் நாட்டிலேயே, எம்.எல்.ஏ.வாக தேர்வான முதல் நடிகர் எனும் சிறப்பை பெற்றார். அடுத்ததாக 1967-ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடவில்லை. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் சரிவர பிரசாரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதை சரிசெய்வதற்காக எஸ்.எஸ்.ஆர். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்திய அண்ணா, தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் கூறினார். அதனை ஏற்றுக்கொண்டு அந்த தேர்தலில் தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்தார். பின்னர் 1972-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி. ஆனார்.
1980-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து எம்.ஜி.ஆருடன் தேர்தலை சந்தித்தார். ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுவும் தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற சாதனையை எஸ்.எஸ்.ஆர். படைத்தார்.
Advertisement
Advertisement






