சசி தரூர் முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், வெளியுறவுத்துறை இணையமைச்சருமாக பணியாற்றியுள்ளார்.
2009 இந்திய மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 99998 வாக்குகளில் வெற்றிபெற்றார். 2009, 2014-ஆம் ஆண்டுகளில் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இவர் முன்னர் ஐ.நாவின் துணை பொதுசெயலராக (தொடர்பு மற்றும் பொது தகவல்) பதவி வகித்தவர்.
2006ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் பதவிக்கான போட்டியில் இந்தியாவினால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு போட்டியிட்ட எழுவரில் இரண்டாவதாக வந்தவர்.
இவர் எழுத்தாளர், பத்தியாளர், தாளியலாளர், மனித உரிமை வழக்கறிஞர் என பன்முகப்பட்டவர். பல உதவி நிறுவனங்களில்,பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்கள் போன்றவற்றில், அறிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.