சாத்வி பிராக்யா ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் ஆவார்.
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இத்தாக்குதலின் போது 37 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிராக்யா உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
சாத்வி பிராக்யா தற்போது ஜாமீனில் உள்ளார். நடைபெறவுள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிடுகிறார்.